வவுனியா வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

1204

ஆர்ப்பாட்டம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்டமையைக்கண்டித்து இன்று (25.06.2022) மதியம் 12.30 தொடக்கம் 1.00மணி வரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

ஐனரஐ சுகாதார சேவைகள் சங்கத்தினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள், மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உயிர்காக்கும் தொழிலுக்கே உயிராபத்தா?, எரிபொருளினால் தாக்கப்படும் சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குக, கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்,

மருத்துவ சேவையை அவமதிக்காதே , அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்து , மருத்துவ உலகே மகத்துவ உலகு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.