வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயம்!!

1556

விபத்து..

வவுனியாவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளாதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – பறனட்டகல் பகுதியில் இன்று (25.06) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வாகன சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் தனது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கபட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.