177 பவுண்கள் கொள்ளை : பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது!!

842

177 பவுண்கள் கொள்ளை..

நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த திருட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30.06) ஹட்டன் பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டில் சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நோர்வூட் நகர பகுதியைச் சேர்ந்த மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 டிசம்பர் 09 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்னொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து களவாடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையிலேயே சந்தேகநபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

54 தங்க சங்கிலிகள், 757 தோடுகள், 177 பெண்டன்கள், 18 வலையல்கள், 1 தங்க நெக்லஸ் உட்பட மேலும் சில தங்க நகைகளே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கைதானவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01.07) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.