எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் புதிய அறிவிப்பு!!

796

எரிவாயு..

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இம்மாதம் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்ய,

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன் முதல் கப்பல் வரும் 6ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும், எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.