மாணவன் முகத்தில் காணப்பட்ட பரு : ஆசிரியை எடுத்த முயற்சி : பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

750

திருவண்ணாமலை..

மாணவன் முகத்தில் இருந்த பருவை ஊசியால் ஆசிரியை குத்திய நிலையில், மாணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்மியம்பட்டு கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த செவத்தான் என்பவரது மகன் சிவகாசி(15). அருகில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

சில தினங்களுக்கு முன்பு குறித்த மாணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பெற்றோருக்கு போன் வந்துள்ளது. மகனை பார்ப்பதற்கு பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

மாணவனை அவதானித்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம் மாணவனின் முகம் வீங்கி இருந்துள்ளது. நடந்தது குறித்து மாணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, முகப்பருவை அகற்றுவதற்காக ஆசிரியை மகாலட்சுமி ஊசியால் குத்தியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவனுக்கு, நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த நிலையி்ல், தற்போது ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.