தமிழ் – சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்!!

582

Schoolதமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் இன்று ஆரம்பமாகின்றன. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இப் பாடசாலைகளுக்கு கடந்த 8ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

இதன்படி இன்று திறக்கப்பட்டுள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் கடந்த 16ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.