தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்… அனாதையான கைக்குழந்தை!!

577

கேரளாவில்..

கேரளாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே புனலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கிருஷ்ணன். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கார் கூலக்கடை பகுதியை கடக்கும் போது கொட்டாரக்கரை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் தினேஷ் கிருஷ்ணனின் காரில் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் தினேஷ் கிருஷ்ணனும் மனைவி அஞ்சுவும் சம்பவ இடத்தில் பலியாகினர். 3 மாத குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது. விபத்துக்குள்ளான மற்றொரு காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.

காயமடைந்த குழந்தை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மூன்று மாத கை குழந்தையை தவிக்க விட்டுவிட்டு விபத்தில் தாய், தந்தை இருவர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.