கிளிநொச்சியில் கர்ப்பிணியை கொன்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!!

286

Arrestமாத்தளையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியால் ஏமாற்றப்பட்ட மாத்தளையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த வாரம் அவரை தேடி கிளிநொச்சிக்கு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை இரகசியமான இடம் ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த அதிகாரி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் கைதான அதிகாரி குறித்த அடையாளங்களை காவற்துறையினர் வெளிப்படுத்தவில்லை.