6 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் கைது!!

1446

Abuseநோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பிரதேசத்தில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது சந்தேகிக்கநபர் நோட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்றய தினம் சம்பவம் இடம் பெற்று இரண்டு மணித்தியாளங்களின் பின் குறித்த சிறுமியின் தாய், நோட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னதாக சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு மேலதிக விசாரனைகளை நோட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே சம்பவம் குறித்து சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையின் பின்னரே உறுதியாக எதுவும் கூறமுடியும் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.