வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்!!

1495

அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்..

வவுனியா மாவட்டத்தில் டீசலின்றி 1990 சுவசெரிய சுகப்படுத்தும் அன்பியூலன்ஸ் சேவை வாகனங்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றன.

வருடத்தின் 365 நாட்களும் இரவு பகல் பாராது எவ்வித கட்டணமும் அறவிடாது இலவசமாக சேவையினை வழங்குகின்ற 1990 சுவசெரிய சேவையானது தற்போது அன்பியூலன்ஸ்க்கான டீசல் இன்மையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமையுடன் வவுனியா நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்ளுவதற்காக 1.5 கிலோமீற்றர் தூரத்தில் எரிபொருள் வரிசையில் அன்புலன்ஸ் வாகனம் மூன்று நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவைக்கான டீசல் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையூடாக வழங்கப்பட்ட போதிலும் திங்கள் – வெள்ளி வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மாத்திரமே வழங்கப்படுவதுடன் வார இறுதி நாட்களில் எரிபொருள் இல்லாமல் குறித்த சேவைகள் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் கடந்த வாரங்களில் இ. போ.சவினாரால் மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு காரணமாக எரிபொருள் பெறமுடியாத நிலையும் ஏற்பட்டதுடன் ஐ.ஒ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவசர சேவைக்கான எரிபொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படாத நிலைமையும் உள்ளது.

மேலும் தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு திடீர் நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்புக்கள் பதிவாகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்