மண்ணெண்ணை கலக்கப்பட்ட குடிநீரை கொண்ட 37 ஆயிரம் தண்ணீர் போத்தல்கள், நுகர்வோர் அதிகார சபையினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன
களனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நிறுவனம் ஒன்றினால் ஏற்கனவே பொதியிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த தண்ணீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை தவிர அந்த நிறுவனத்தினால் வியாபாரத்தளங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் போத்தல்களும் நேற்று கைப்பற்றப்பட்டதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றின் பெறுமதி 50 லட்சம் ரூபாய்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.