பேக்கரி உற்பத்திப் பொருட்கள்..
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திகளின் விற்பனை குறைந்து செல்வது குறிப்பிடத்தக்கது.