மாடு மேய்க்கச் சென்ற பெண் மீது பாலியல் பலாத்காரம்!!

317

Abuse1சிலாபம் – விஜய கட்டுபத பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற 49 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.

மாடு மேய்க்கச் சென்ற போது இடைமறித்த நபர் தன்னை பலாத்காரமாக வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர், குறித்த பெண்ணால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.