வவுனியாவில் பேருந்தின் மீது கல் வீச்சு தாக்குதல் : பெண் ஒருவர் கைது!!

2128

கல் வீச்சு..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரி நகரில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வழிமறித்துள்ளார்.

பேருந்து நிறுத்தப்படவில்லை என்று ஆத்திரமடைந்து குறித்த யுவதி பேருந்தின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் கண்ணாடி நொருங்கியதையடுத்து பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.