கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை : பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

818

பதற்ற நிலை..

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். அலுவலகத்திற்குள் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் நோயாளர்காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.