24 பேர் படுகாயம்..
கொழும்பில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் அலுவலகம் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கடும் பதற்றமான சூழல் கொழும்பில் நிலவி வருகின்றது.
காயமடைந்தவர்கள் அனைவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.