முற்றுப்பெறும் எரிபொருள் வரிசைகள்?
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று (15.07.2022) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் தலா 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவையாளர்களுக்கு இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் எரிபொருள் விநியோகிப்படவுள்ளது.
இச் செய்தி நீண்டநாட்களாக வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.