புத்தரின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண் நாடுகடத்தப்பட்டார்!!

289

Deportபுத்தரின் உருவத்தை கையில் பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண்ணை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கையில் புத்தர் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று காலை 6.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் விசாரணைகளின் பின் நேற்று மாலை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவரை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த​ பெண் மிரிஹான தடுப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.