இலங்கை அணி வீரர்களான மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார மீது ஒழுக்காற்று விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முயற்சிக்கின்றமை முட்டாள்தனமான செயற்பாடு என இலங்கை கிரிக்கெட் நிறுவன முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் உள்ள மூளையற்ற சுயனநலவாதிகளின் செயற்பாடாக இதனை தான் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்காற்று விசாரணை மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பின் வாசல் வழியாக வந்தவர் என திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.