பெண்ணுக்கு நடந்த கொடுமை : தோழி, தோழியின் கணவர் செய்த காரியம்!!

2233

திருவொற்றியூரில்..

கருமுட்டையை விற்குமாறு ஸ்ருதியை ஜெனிஷ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கேட்டு கொடுமைப்படுத்தியதோடு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சென்னை திருவொற்றியூரில் கரூ முட்டையை விற்க வலியுறுத்திய பெண்ணின் தோழி மற்றும் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ருதி (வயது 22) என்பவருக்கும் அவரது கணவர் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு குழந்தைஉள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது ஸ்ருதியின் தோழியான ஐஸ்வர்யா என்பவர் அவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஒடைக்குப்பத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணா ஸ்ருதியை வீட்டில் வேலைக்காரி போல் நடத்தியுள்ளனர். மேலும், ஸ்ருதியிடம் கருமுட்டையை விற்குமாறு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா சுருதியை அடித்து தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு