யாழில் பிரவச வலியால் துடித்த பெண் சென்ற வாகனத்தில் தீர்ந்த எரிபொருள் : பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்!!

1050

பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்…

யாழ்.தொல்புரம் பகுதியில் பெண்ணொருவருக்கு இன்று பிரசவ வ லி ஏற்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் தமது பொலிஸ் வாகனத்தை கொடுத்து உதவியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணிற்கு பிரசவ வ லி ஏற்பட்ட வேளை அவர் முச்சக்கர வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது திடீரென முச்சக்கர வண்டியில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.

இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் முச்சக்கர வண்டிக்கு பெட்ரோல் வழங்கிய நிலையில், முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இயங்க மறுத்துள்ளது.

இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தினை வழங்கி குறித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு உதவியுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

You May Like This Video