நாட்டில் நிலவும் நெருக்கடி 5 மாதங்களுக்குள் தீரும் : மத்திய வங்கியின் ஆளுநர் உறுதி!!

609

நெருக்கடி…

இலங்கையிடம் தற்போது தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இப்போது இருக்கும் திட்டத்திற்கு அமைய, எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும்.

அதுவரை கடினமாக காலமாகவே அமையும். எவ்வாறாயினும், ஒளியை காணக்கூடிய சுரங்கத்தின் விளிம்பினை நாம் அடைந்துள்ளோம். எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

You My Like This Video