250 கோடி ஜீவனாம்சம் கேட்டது உண்மையா? மீண்டும் நாக சைதன்ய பற்றி சமந்தா சொன்ன பதில்!!

1810

நடிகை சமந்தா..

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் கடந்த வருடம் திடீரென விவாகரத்து அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தனர். அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என பல்வேறு வதந்திகள் அப்போது வலம் வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் ஷோவில் சமந்தா பங்கேற்றபோது அவரிடம் ‘மீண்டும் லவ் பண்ணுவீங்களா’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லவே இல்லை என பதில் கூறி இருக்கிறார்.

மேலும் சமந்தா இதயத்திற்கு செல்ல என்ன வழி என கரண் ஜோகர் கேட்க ‘அது மூடப்பட்டு இருக்கிறது. U டர்ன் எடுத்து போய்டுங்க’ என தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமின்றி தான் 250 கோடி ருபாய் ஜீவனாம்சம் வாங்கியதாக வந்த வதந்தியை பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என காமெடியாக பதில் அளித்து இருக்கிறார்.