அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பு!!

729

அரச ஊழியர்களை..

அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைக்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏலவே அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் முதல் அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.