உணவுப் பற்றாக்குறை..
இலங்கை அண்மைக்காலத்தில் மிக மோசமான ஒரு உணவு பற்றாக்குறை நிலைமையைஎதிர்நோக்குவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்தீக் இதனை இன்று(24) கொழும்பில் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கை பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: முகவர்கள் வெளியிட்ட தகவல்
இது தொடர்பில் அவர் தெரிவிப்பதாவது, கடந்த மாதத்தில் இலங்கையின் உணவு பணவீக்கம் 80 வீதத்தை அடைந்து இருக்கிறது. இது சில மாதங்களில் அதிகரிக்கக்கூடும்.
தற்போது இந்த நிலைமையை சமாளிப்பதற்காக இலங்கையில் பல குடும்பங்கள் உணவு உட்கொள்ளலை சுருக்கியுள்ளன. மேலும் பெரும்பாலான குடும்பங்கள் இளையவர்களுக்கு மாத்திரம் உணவு வழங்களில் முன்னுரிமையை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் உலக உணவுத்திட்டம் 3.4 மில்லியன் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கவுள்ளது. அத்துடன் 1.4 மில்லியன் மக்களுக்கு நிபந்தனையற்ற வகையில் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-