தாய்ப்பால் கொடுக்கும்போது உயிரிழந்த இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1768

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த மருத்துவமனையில் ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்,

சம்பவயிடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில் இந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது