உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா கிராமத்தைச் சேர்ந்த பைனி கெவாட் 3 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். இவரது மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் ஊற்றுவது வரையிலான வேலையை செய்து வந்தார்.
எருமை மாடுகள் மீது அதிக பாசம் கொண்ட ரஜினி, பெரும்பாலான நேரத்தை அவற்றுடன் கழித்தார். ஜூலை 8 ஆம் தேதி எருமை மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அது திரும்பி வரவில்லை என்றும் தந்தை கூறினார்.
எருமை மாட்டை இழந்ததால் சோகமான ரஜினி கடந்த ஜூலை 20ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.