இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிய கொடூரர்கள் : நெஞ்சை உலுக்கும் பெண்ணின் கதறல்!!

1838

சோலப்பூரில்..

மஹாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரில் உள்ள சதான்சன் நகரை சேர்ந்த ஓர் திருநங்கை, தன்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டதாக திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை கூறுகையில், “எனக்கு 26 வயது ஆகிறது.

நான் கடந்த 6 ஆண்டுகளாக திருநங்கையாக வாழ்ந்து வருகிறேன். நான் நகரப்பகுதிகளில் பிச்சை எடுக்கும் பணம் அனைத்தையும் தினம்தோறும் அடித்துத் துன்புறுத்தி என்னை பாலினமாற்றம் செய்த நபர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள்.

புனேவில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று எனக்கே தெரியாமல், திருநங்கையாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்துவிட்டார்கள். என்னோடு சேர்த்து பல திருநங்கைகள் இப்படி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இப்படி பாதிக்கப்படும் காணொலி திருநங்கைகளின் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்டும் இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை’’ என்றார்.