மகளுடன் நெருங்கிப் பழகிய நபரை எச்சரித்த தாய்க்கு நடந்த பரிதாபம்!!

1415

பழனியில்..

பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (55). இவர், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கிராமத்தினர் பழனி தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

மேலும் உடல் அழுகி நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்காக அன்னம்மாளின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக போலீசார் கொலையாளியை நெருங்க முடியவில்லை.