தூத்துக்குடியில்..
கைது செய்யப்பட்ட முத்துக்குட்டி, மகாலட்சுமி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (28).லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டியின் (43) மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து வெளியேறிய மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டு, கடந்த மாதம் 29-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீஸார் அவர்களை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர். மேலும், அவர்கள் இருவரையும் வீரப்பட்டி கிராமத்துக்கு வர வேண்டாம் என எட்டயபுரம் போலீஸாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், கடந்த வாரம் மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் வீரப் பட்டிக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதி இருவரும்வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, எட்டயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து முத்துகுட்டி, ரேஷ்மாவின் தாய் மகாலட்சுமி(39)ஆகியோரை கைது செய்தனர்.