மனைவி கடலுக்குள் விழுந்ததாக பதறிய கணவன் : மனைவி செய்த மோசமான செயல்!!

1540

ஆந்திராவில்..

மனைவியை கடலில் விழுந்ததாக கணவன் போலீசாரிடம் புகார் அளிக்க இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.

இதனிடையே, இரண்டாவது திருமண நாளை கொண்டாட கணவனை கோவிலுக்கு அழைத்திருக்கிறார் மனைவி. அதன்படி, விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலம் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அவர்.

அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பின் அந்த இளம்பெண் திடீரென காணாமல் போக கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.

இதன் தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்கள் . இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளது. ஆனாலும், எந்த பலனும் கிடைக்காததால், உண்மையாகவே அந்த இளம்பெண் கடலில் தான் விழுந்தாரா? என சந்தேகித்து விசாரணையில் இறங்கினர்.

அப்போது தான் காவல்துறைக்கும் கணவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் விழுந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை நெல்லூர் காவல்துறை அதிகாரிகள் உயிருடன் பிடித்திருக்கின்றனர்.

கூடவே அவரது காதலரும் இருந்திருக்கிறார். 21 வயதுடைய அந்த இளம்பெண் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க இப்படி நாடகம் ஆடியிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கணவரை மட்டுமின்றி அப்பகுதி முழுவதும் பரபரப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.