பாம்பு கடித்து மாணவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் : 78 வயது முதியவரின் விபரீத செயல்!!

1775

தமிழகத்தில்..

தமிழகத்தில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 78 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் அத்தையுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 24-ம் திகதி அந்த சிறுமி பாம்பு கடித்து இறந்தார்.

பாம்பு கடித்து இறந்த மாணவியிடம், ஏற்கெனவே 3 மாதத்துக்கு முன்னர் முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியிடம் அத்துமீறிய 78 வயது முதியவர், அதை வீடியோ எடுத்தவர் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் என 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறும்போது, சிறுமியை முதியவர் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ உள்ளது. இருப்பினும், சிறுமி இறப்புக்கு பாம்பு கடித்ததே காரணம்.

இது தொடர்பில் முதியவர் பாலு மற்றும் விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.