காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்… பின்னர் நடந்த விபரீதம்!!

2010

ஆந்திராவில்..

ஆந்திரா மாநிலம், கோனே அருவிக்கு அழைத்து சென்று, காதல் மனைவியை கத்தியால் குத்தி வீசிவிட்டு வந்த கணவனின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி பால்கிஸ்(39).

இவர்களின் மகள் தமிழ் செல்வி (21). பாடிய நல்லூர், ஜோதி நகரை சேர்ந்தவர் மதன் (25), இவர், மெக்கானிக், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ் செல்வியும், மதனும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில், மதன் வீட்டில் இருந்த தமிழ் செல்வி காணவில்லை என்பதை தெரிந்துகொண்ட பெற்றோர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அந்த விசாரணையில், கடந்த ஜூன் 26ம் தேதி அன்று, மதன், தமிழ்செல்வி இருவரும் ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள கோனே அருவிக்கு சென்றது தெரியவந்தது. அங்கு ஏற்பட்ட தகராறில், தமிழ்செல்வியை, மதன் கத்தியால் குத்திவிட்டு அங்கேயே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

அங்குள்ள, சிசிடிவி கேமராக்களில், மதன், தமிழ் செல்வியுடன் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், அம்மாநில போலீசார் உதவியுடன், செங்குன்றம் போலீசார், வனப்பகுதிக்கு சென்று தேடியும், தமிழ் செல்வியின் உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து போலீசார், மதன், அவரின் நண்பர்கள் பாண்டு, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த ஒரு மாதமாகியும், தன் மகளின் நிலைமை இன்னும் தெரியவில்லை என தமிழ் செல்வியை கண்டுபிடித்து தருமாறு, உயர் நீதிமன்றத்தில், பெற்றோர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர், தமிழ் செல்வி, போன் போட்டு, தாயிடம் பணம் கேட்டார், அப்போது, மதன், தமிழ் செல்வியின் செல்போனை பிடுங்கி சண்டை போட்டார்.

பணத்திற்காக, தமிழ் செல்வியை மதம் கத்தியால் குத்தியிருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர். கத்தி குத்தப்பட்ட தமிழ் செல்வி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா எனதுகூட தெரியாமல் பெண்ணின் பெற்றோர் பரிதவித்துள்ளனர்.