5 வருடமாக பழிவாங்க துடிக்கும் தெருநாய் : ஓர் சுவாரஸ்ய சம்பவம்!!

1437

கேரளாவில்..

கேரள மாநிலம் பெரும்பிலாவு பகுதியில் சுற்றித்திருந்த தெருநாய் மீது 5 வருடங்களுக்கு முன்பு அவ்வழியாகச் சென்ற கார் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நாய் தீவிர சிகிச்சை பெற்று சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அப்பகுதிக்கே வந்துள்ளது.

இதையடுத்து அந்த வழியாகச் செல்லும் கார்களை நாய் பின்தொடர்ந்து மோப்பம் பிடித்து வருகிறது. முதலில் நாய் ஏன் இப்படி செய்கிறது என்று குழப்பத்தில் இருந்த மக்களுக்கு பின்னர்தான்,

இந்த நாய் தன்மீது மோதிய காரை தேடுகிறது என தெரியவந்துள்ளது. நாயின் இந்த பழிவாங்கும் போராட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.