இரு இளைஞர்களுக்கு நடு வீதியில் நடந்த பரிதாபம்!!

1335

படப்பையில்..

படப்பையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்.

இவர் தனது நண்பர்களான சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (17), பனையூரை சேர்ந்த விக்னேஷ் (18) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

படப்பை பகுதியை இவர்கள் வந்தடைந்த போது சாலையை கடக்க முயன்ற கார் மீது இவர்களது இருசக்கர வாகனம் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட உதயகுமார், லோகேஷ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் உடன் வந்த விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறை மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதனை தொடர்ந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்து விபத்து குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.