மனைவியை தவறாக பார்த்தததால் முதியவரை அடித்துக் கொன்ற கணவர்!!

1792

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). . இவருக்கும் கிளியனூர் இருளர் குடியிருப்பை சேர்ந்த பாலு என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.



சில மாதங்களுக்கு முன்னர் பாலுவின் மனைவியை ராமலிங்கம் தவறாக பார்த்ததாகவும் அவரை பாலு திட்டியதாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடி போதையில் பாலு ராமலிங்கத்தை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கைது செய்தனர்.