திடீரென வந்த நிர்வாண வீடியோ அழைப்பு : இரண்டு முதியவர்களை மிரட்டி 3.64 லட்சம் பறித்த மர்மப் பெண்!!

788

மும்பையில்..

மும்பையில் இளம்பெண் ஒருவர் இரண்டு முதியவர்களுக்கு ஆபாசமாக போன் செய்து பேசிவிட்டு, அதை அப்படியே வீடியோ எடுத்து, மிரட்டி ரூ.3 லட்சம் பெற்றிருக்கிறார். மும்பை அந்தேரியைச் சேர்ந்த 86 வயது முதியவருக்குக் கடந்த மாதம் 28-ம் தேதி மர்ம நம்பரிலிருந்து வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது.

வீடியோ காலை எடுத்தபோது காலில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காட்சியளித்தபடி பேசினார். உடனே முதியவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீடியோ கால் பதிவை அந்தப் பெண் பதிவு செய்துகொண்டார். இதையடுத்து அந்த்ப் பெண் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டினார்.

அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 3 லட்சம் தர வேண்டும் என்று கூறி அந்தப் பெண் மிரட்டினார். முதியவரும் வேறு வழியில்லாமல் தனது இரண்டு வங்கிக் கணக்கிலிருந்து 2.99 லட்சத்தை அந்தப் பெண் சொன்ன வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தார். அதன் பிறகு இது குறித்து முதியவர் அம்போலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதே போன்று மும்பையைச் சேர்ந்த மற்றொரு முதியவருக்கும் இதே முறையில் மர்மப் பெண்ணிடமிருந்து நிர்வாண வீடியோ கால் வந்தது. முதியவர் போனை எடுத்துப் பேசியபோது அதைப் பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டினார். முதியவரும் அந்தப் பெண்ணுக்கு ரூ.64 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். இது குறித்து அவரும் போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

இரண்டு முதியவர்களிடமும் மோசடி செய்தது ஒரே பெண்தானா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. இதையடுத்து போலீஸார் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இருவரும் பணத்தை அனுப்பிய வங்கிக் கணக்கு யாருக்குச் சொந்தம் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.