காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு : போலீஸ் தீவிர விசாரணை!!

946

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைசெல்வி(20) என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கலைச்செல்வியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 2ஆம் தேதி பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை செய்து கலைச்செல்வியை அவரது விருப்பத்தின் பேரில் கணவர் கோபிநாத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கலைச்செல்வி தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்குச் சென்ற பெண்ணை காணவில்லை என கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கும் காணவில்லை. இதனால் தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.