அருவி அருகே கேமராவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்க்கு நடந்த பரிதாபம் ; பதறித் துடித்த நண்பர்கள்!!

1775

அருவியில்..

கொடைக்கானல் அருவியில் போட்ட எடுக்கும்போது தவறி விழுந்த மாயமான இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற இளைஞர் கீழ்மலை கிராமத்தில் உள்ள பெரும்பறை அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இளைஞர் அஜய் பாண்டியன் அருவியில் தவறி விழும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.