10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

881

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (19). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஆனந்தராஜ் தீர்த்தவாரி கடற்கரை அருகே யாரும் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆனந்தராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.