மாடியிலிருந்து நான்கு வயது மகளை தூக்கி எறிந்த கொடூர தாய் : மனதை பதற வைக்கும் சம்பவம்!!

1520

பெங்களூருவில்..

பெங்களூருவில் மருத்துவர் ஒருவர் தனது நான்கு வயது மகளை நான்காவது மாடியிலிருந்து வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு, தானும் மாடியிலிருந்து குதிக்க முயற்சித்த நிலையில் சில நொடிகள் அக்கம்பக்கத்திலிருந்து வந்த ஒரு சிலர் அவரை இழுத்து தரையில் தள்ளி அமுக்கியத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்.

இந்த மொத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தை வெளியாகி வைரலாகிவருகிறது. குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு பெங்களூரு எஸ்ஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நான்கு வயது சிறுமிக்கு செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பெண் மன உளைச்சலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கணவர் பொலிஸில் வழக்கு பதிவு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட பல் மருத்துவரின் பெயர் சுஷ்மா பரத்வாஜ், அவரது கணவரின் பெயர் கிரண் (மென்பொருள் பொறியாளர்) என்றும், இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுஷ்மாவின் மனநலம் குறித்தும் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கவுடா தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.