உணவுப்பொதி, தேநீர் விலை குறைப்பு : வெளியான தகவல்!!

918


உணவுப்பொதி, தேநீர்..



இலங்கையில் எதிர்வரும் நாட்களில் உணவுப்பொதி,தேநீர் கோப்பைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



எரிவாயு விலை குறைக்கப்பட உள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.




கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவியமையினால் உணவுப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.


இந்நிலையில், உணவுப் பொதியினதும், தேநீர் கோப்பையினதும் விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் குறைக்க உள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.