கண்ணுக்குள் தேசிய கொடி : தேசப்பற்றால் வியக்க வைத்த மனிதர்!!

1871

தமிழகத்தில்..

இந்தியாவின் தமிழகத்தில் கண்ணின் உள்ளே தேசிய கொடியை வரைந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் சமூக ஆர்வலரான ராஜா. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.



இதற்காக வரும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றவும், சமூகவலைத்தளங்களில் தங்களது DPயை தேசியக்கொடியாக வைக்கவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜா கண்ணில் தேசிய கொடியை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, முட்டை ஓட்டின் உள்பகுதியில் இருக்கும் வெள்ளை கருவின் மேல் உள்ள மிக மெல்லிய ஆடை போன்ற படலத்தை எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார். மேலும் தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாகவும், மக்கள் யாரும் இதை பின்பற்ற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.