சென்னையில்..
சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (31), பாரதி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாததால் மனைவி பாரதி, டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார்.
இதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்ட பழனி து பாரதியின் தலையை சுவற்றில் இடித்து கீழே தள்ளி உள்ளார்.
பின்னர் ரத்தவெள்ளத்தின் கிடந்த பாரதியை கட்டியணைத்து அருகில் படுத்துக் கொண்டார். அருகிலிருந்த நபர்கள் பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.