தன்னைத் தானே வாடகைக்கு விட்ட இளைஞன் : ஓர் சுவாரஸ்ய சம்பவம்!!

705

ஜப்பானில்..

ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டுள்ளார்.

டோக்கியைவை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதிய தொழில் தொடங்க யோசித்து தன்னைத்தானே வாடகைக்கு விட்டார்.

கடைக்கு செல்வதற்கு, விளையாடுவதற்கு, எளிதான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றால் தன்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என ட்விட்டரில் பதிவிட்டர்.

அவர் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன் என்றும் பாலியல் ரீதியாகவோ தன்னை அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவதாகவும் வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை கேட்டு பொழுதை கழிப்பதற்காக மட்டுமே செல்வதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து அந்த இளைஞரை பலர் வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.