மனைவியை காப்பாற்ற தன் உயிரை விட்ட கணவன்!!

464

அவுஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் சென்ட்ரல் கோஸ்ட் பகுதியில், பெரும் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட மனைவியைக் காப்பாற்றுவதற்காக குதித்த கணவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிட்னியைச் சேர்ந்த ஆறு பேர் கற்பாறைகளில் ஏறி மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் பெரும் அலையடித்து அவர்களில் ஒருவரான பெண்ணை கடலுக்குள் விழுத்தியது.

அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் கடலில் பாய்ந்து அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். எனினும் இன்னொரு அலைத் தம்மைத் தள்ளியதை அடுத்து, குறித்த பெண் தானாக கரையை அடைந்திருக்கிறார். ஆனால், அவரைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த ஆண்கள் கரை திரும்பவில்லை.

இவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டாரென பொலிஸ் மேலதிகாரியொருவர் தெரிவித்தார். இவரது சடலத்தை கரைக்கு எடுத்த வந்தபோது, இறந்தவர் தமது கணவர் என்பதை மனைவி அடையாளம் கண்டியதாகவும் அவர் கூறினார்.

குறித்த நபர் சீனாவை சேர்ந்தவர் எனவும், பொழுது போக்கிற்காக மீன்பிடிக்கும் நோக்கில் இவர் சிட்னிக்கு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தார்கள்.

இரண்டாவது நபரைத் தேடும் முயற்சிகள் இருள் காரணமாக கைவிடப்பட்டதுடன், தேடுதல் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பமாகுமெனத் தெரிகிறது.

M1 M2