சேலத்தில்..
தமிழக மாவட்டம் சேலத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காசி – சுதா. இவர்களது குழந்தைகள் வேதவர்ஷினி, பவானிஸ்ரீ.
தனியார் பள்ளி ஒன்றில் மூத்தமகள் வேதவர்ஷினி எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி வாகனம் வந்தபோது வேதவர்ஷினியை தாய் சுதா அதில் ஏற்றிவிட்டு, திரும்பியபோது மற்றோரு குழந்தை பவானிஸ்ரீ பின்னால் வந்துள்ளது.
இதனை சுதா கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சற்று நேரத்தில் குழந்தை பவானிஸ்ரீயின் மீது பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் எறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல்நசுங்கி இறந்துள்ளது.
இதனை பார்த்த தாய் சுதா அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண் முன்னே குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி