வவுனியா செட்டிகுளத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!!

323

A1வவுனியா, செட்டிக்குளம், முசல்குட்டி பிரதேசத்தில் தொல்லியல் பெறுமதிக்க இடம் ஒன்றில் புதையல் தோண்டி 6 பேரை தாம் கைது செய்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து பூமியை ஸ்கான் செய்யும் இயந்திரம், சமஸ்கிரத எழுத்துக்களுடன் கற்கள், தொல்லியல் பெறுமதிக்க செங்கற்கள்,பூஜைப் பொருட்கள் மற்றும் வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.