விளையாட்டாக இறுக்கி அணைத்த நண்பர்.. வலியால் துடித்த இளம்பெண் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை!!

582


சீனாவில்..



சீனாவில் இளம்பெண் ஒருவரை, அலுவலக நண்பர் விளையாட்டாக இறுக அணைத்ததில் அவரின் விலா எலும்புகள் உடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக அணைத்திருக்கிறார்.




அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருந்த நிலையில், பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பெண்ணிற்கு இரவு முழுவதும் வலி அதிகமாக இருந்ததால், சுடுநீர் ஒத்தடம் கொடுத்துள்ளார். ஆனாலும் வலி குறையாமல் மறுநாள் வரை இருந்ததால் அலுவலகத்திற்கு விடுமுறை கூறிவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.


பின்பு வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஸ்கேன் எடுத்துள்ளார். அதில் குறித்த பெண்ணின் 3 விலா எலும்புகள் உடைந்திருந்ததையடுத்து, சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான ரசீதை காட்டி பணம் கேட்டுள்ளார்.


அதற்கு அந்த நபர், “நான் கட்டிப் பிடித்ததால்தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?” எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்திருக்கிறார்.

வேறு வழியில்லாமல் குறித்த பெண் நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பை உடைத்துக்கொள்ளவில்லை.

எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

உங்க மேல பாசம் வைக்கிறவங்களை காக்க வைக்காதீங்க – காணோளியினை பாருங்கள்