மனைவியின் திட்டம் தெரியாமலேயே உயிரைவிட்ட கணவன்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!

665

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த வாலிபரை அடித்து கொன்றுவிட்டு நகைகளை பறித்து சென்ற மர்ம கும்ப கும்பல் சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு இருவரும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி – முத்துமாரி தம்பதியினரை வழி மறித்ததாக கூறப்படுகிறது.

மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30கிராம் நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது வைரவசாமிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட வைரவசாமி சரமாரியாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் காரில் வந்த மர்ம கும்பல் முத்துமாரியின் நகைகளுடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி முத்துமாரி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், கணவனை கூலிப்படையை ஏவி முத்துமாரி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் இசக்கி என்பவரை பிடித்து கணவனை கொன்றதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.